×

பைனான்சியர் தற்கொலை

வீரவநல்லூர், மே9: சேரன்மகாதேவியில் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் பெசலா மகன் முத்துசெல்வம்(53), பைனான்சியர். இவருக்கு லதா(50) என்ற மனைவியும் 1 மகள், 1 மகன் உள்ளனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வசூலுக்கு சென்ற முத்துசெல்வம் வீட்டிற்கு வந்தார். பின்னர் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசெல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பைனான்சியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Veeravanallur ,Cheranmahadevi ,Besala ,Muthuselvam ,Cheranmakadevi Anavaradhanallur Street ,Lata ,Chennai ,
× RELATED சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா